இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

04. 01 .2024
கவி இலக்கம் -297
உலகின் நிலைமாற
என்னென்ன கொண்டு
வருகிறாய்

புத்தம் புது ஆங்கிலப்
புத்தாண்டே நீ மலர்க
பூத்துக் குலுங்கி புதிய
புத்துணர்வு நிறைத்திடு

மலையாகக் குவிந்திட்ட
மரணம் ,வெட்டுக்குத்து
மாந்தர் காணா நோய்கள்
கலையத் தூரத் துரத்திடு

அலையாகத் தொடரும்
காலநிலைச் சீற்றமுடன்
கடுஞ் சூறாவளி வெள்ளப்
பெருக்கை அறவே நீக்கிடு

போதைப் பொருள் சதிப்
பாவனைப் பூதத்தை வெடி
குண்டு வீசித் தகர்த்திடு

தரணி காணும் யுத்தம் ,
குண்டு வீச்சு ஒழிந்து
கடவுளைத் தொழுதிட

புதுப் புது பொலிவோடு
ஆங்கிலப் புத்தாண்டே
உலகின் நிலை மாற
வந்து தந்திடு .

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading