ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

27.04.23
ஆக்கம் – 266
வளர்ந்த குழந்தைகள் தாமே
கூட்டில் இருக்கையில்
குறும்பு காட்டி வளருது
சின்னஞ் சிறியது

கூடு விட்டுப் போகையில்
வீறாப்பு கூட்டி வேகுது
பென்னம் பெரியது

குழந்தையில் குதூகலமானது
முதுமையில் முக்கலானது
எதுவும் செய்ய முடியாது
சிக்கித் தவிக்க ஏக்கமானது

ஏன் வெளியில் வந்ததென்று
மனம் வருந்தி மருண்டு ஓடுது
கனத்த இதயம்

எல்லாமிருந்தும் எட்டி எடுக்க முடியாது
வெட்டியான இதயத்தில்
முட்டி முட்டி உழைத்துக்
கழைத்து மல்லுக் கட்ட முடியாது
சொல்லாலும் செயலாலும்
வளர்ந்த குளந்தைகள் தாமே
என்றது .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading