ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

24.02.22
கவி ஆக்கம்-211
சோதனைக் காலம்
எப்ப பார்த்தாலும் ஏதோ ஒரு யோசனை
இப்ப கேட்டால் காலத்தை ஈர்த்த சோதனை
அப்ப எல்லாம் ஆண்டவன் ஆட்டுவித்த போதனை

தற்போது மனிதன் வேட்டுவைக்க
இயற்கை சீற்றம் கொண்டு
தாறுமாறாய்க் கிழித்து ஈமக்கடன்
செய்யும் ஆராதனை

இனப் பிரச்சனையால் நாடுவிட்டு நகர்ந்து
சுனாமியால் செத்து நொந்து சூறாவளி பெயர்ந்து
வெள்ளத்தால் வெந்து வேதனை பெற
எரிமலை வெடித்து ஏக்கந் தந்து

காடு பற்றி எரிந்து கானக மிருகமிழந்து
கடுங்கால் புயல் காற்று புதுப் பெயரோடு புகுந்து
கொரோனாவும் கோபமுடன் துரத்திய
வரலாற்றுத் துயரமும் உலகெங்குமே.

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading