29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
ழகரமும் தமிழும்
ரஜனி அன்ரன்
“ ழகரமும் தமிழும் “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 30.01.2025
தமிழுக்கு முதலாம் அகரம்
தமிழென்ற அமிழ்திற்கு சிறப்பாம் ழகரம்
குழைந்து வரும் ழகரம்
தமிழுக்கு அதிமதுரம்
பலரது வாயில் இது நுழைவது கடினம்
நுழைந்து விட்டால் அது அமிழ்தம்
அடிக்கடி ழகரத்தை உச்சரித்தால்
கூம்புச் சுரப்பியும் குதூகலிக்குமாம்
உடலுக்கும் உறுதியைத் தருமாம் ழகரம் !
இலக்கணத்தில் இடையெழுத்து
இடையினத்தின் மெய்யெழுத்து ழகரம்
தமிழுக்கு ழகரம் தனிலயம்
அழகு தமிழுக்கும் அழகு சேர்ப்பது ழகரம்
அதுவே தமிழர் எமக்கெல்லாம் மகுடம் !
குழலிலும் யாழிலும் மழலை மொழியிலும் ழகரம்
தழுவிடும் மழையிலும் கொழுகொம்பிலும் ழகரம்
செழித்த செடியிலும் பழுத்த பழத்திலும் ழகரம்
அழகன் திகழன் உழவன் கிழவனென
அழகாய் நாக்கில் குழைந்து வரும் ழகரம் சிறப்பே
அமிழ்தான தமிழுக்கு அணிகலனாம் ழகரம்
அழகு தமிழுக்கு அழகேயழகு ழகரம் !

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...