வசந்தா ஜகதீசன்

வணக்கம்
மாவீரரே….
போரின் அவலங்கள் புதையுண்ட உயிர்க்கொடைகள்
சாலவும் சிறந்திட்ட சரித்திரப்படுகொலைகள்
ஞாலமே மெய்சிலிர்க்கும் நம்பிக்கை வார்த்தையில் கூறுபோட்டு
எம்மினத்தை குற்றுயிராய் தகர்த்தவர்கள்

தாய்நிலக் காப்பிற்காய் தம்முயிரிர்ந்தவர்கள்
தன்னம்பிக்கை முனைப்பிலே எதிரியை வென்றவர்கள்
வீரமே உணர்வென வித்தான மாவீரர்
வெந்தணல் விழ்ந்தே ஆகுதியானவர்கள்

சாவிலும் சரித்திரம் படைத்தவர்கள்
சந்தோச வாழ்வையே எமக்கெனப் புதைத்தவர்கள்
தமிழீழ விடியலே உயிருக்கும் மேலென
விடுதலை வேண்டியே விடுதலையானவர்கள்.

மாவீரர் கனவுகள் விடியலின் விதைப்புக்கள்
விடுதலை வித்துக்கள் தமிழர் வரலாற்று முத்துக்கள்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading