இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உலகின் நிலைமாற
என்னென்ன கொண்டு வருகிறாய்….
உருண்டோடும் ஆண்டே
உலகாளும் வனப்பே
ஆண்டாண்டாய் நீயும்
அவனிக்கு விளக்கே
ஆதாரம் காட்டும் காலத்தின் மிடுக்கே

ஏற்றமாய் உழைப்பிட
மங்காப் புகழினை
மதிநுட்பத் திறனினை
தங்குதடையற்ற தைரிய வாழ்வினை
ஊக்குசக்தி உலகவிருத்தியாய்
தாங்கும் தரணிக்கும்
ஏங்கும் வாழ்விற்கும்
ஏதுகை எதுவோ
ஏற்றமே விளைவோ

மறுமலர்ச்சியின் ஆண்டாய்
மதிநுட்பத் திறனாய்
அதியுயர் விருதின்
அட்சய புவியாய்
வளர்மதி நிறைக்க
வான்புகழ் தளிர்க்க
என்னென்ன கொண்டு வந்தீர்
புத்தாண்டே மலர்க! புவிச்சரிதம் உயர்க!
நன்றி
மிக்கநன்றி

ஏற்றமிகு எழுகையும்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading