பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தைமகளே வருக…
தரணி நிலம் போற்றும்
தைரியமும் நிறையும்
விடியல் தினம் ஏற்றும்
தைமகளே வருக
தன்னிறைவில் நிறைக!

வழிகள் பல காட்டி
வாழ்வில் ஒளி ஏற்றி
வளங்கள் பல நிறைத்து
வையமது காக்கும்
கதிரோனை போற்றும்
தைமகளே வருக
தன்னிறைவில் நிறைக!

உலகமது உனது
உதயமது விடிவு
அறிவின் திறன் அரிதே
ஆற்றலது மிடுக்கே
தைமகளே வருக
தன்னிறைவில் நிறைக!

தொடருவது திங்கள்
தொடக்கமது தையே
அகரமது சுழித்து
ஆண்டதனை தைக்கும்
தைமகளே முதன்மை
தன்னிறைவில் பெருமை!
நன்றி
தொடர்சரிதம் நிறையட்டும்
வாழ்த்துக்கள்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading