வசந்தா ஜெகதீசன்

தைமகளே வருக…
தரணி நிலம் போற்றும்
தைரியமும் நிறையும்
விடியல் தினம் ஏற்றும்
தைமகளே வருக
தன்னிறைவில் நிறைக!

வழிகள் பல காட்டி
வாழ்வில் ஒளி ஏற்றி
வளங்கள் பல நிறைத்து
வையமது காக்கும்
கதிரோனை போற்றும்
தைமகளே வருக
தன்னிறைவில் நிறைக!

உலகமது உனது
உதயமது விடிவு
அறிவின் திறன் அரிதே
ஆற்றலது மிடுக்கே
தைமகளே வருக
தன்னிறைவில் நிறைக!

தொடருவது திங்கள்
தொடக்கமது தையே
அகரமது சுழித்து
ஆண்டதனை தைக்கும்
தைமகளே முதன்மை
தன்னிறைவில் பெருமை!
நன்றி
தொடர்சரிதம் நிறையட்டும்
வாழ்த்துக்கள்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading