இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பண்டிகை வந்தாலே .....

பண்டிகை வந்தாலே…
மனதிலே மகிழ்ச்சி பொங்கும்
மறக்காத நினைவிலே நீந்தும்
பலகார வகைகள் வாசம்
பண்டிகைக் கோலமாகும்
தீபத்தின் ஒளியில் வீடே
திசையெங்கும் வெளிச்சமாகும்

காலத்தின் சுழற்ச்சி மாற்றம்
ஞாலத்தில் வெவ்வேறாகும்
விழாக்களின் கோலம் மாறும்
வெவ்வேறு நிகழ்வு சேரும்
பல்லின மக்கள் கூட்டில்
பறவையாய் நாமும் கூடி
எம்மின விழாவின் மகிழ்வை
ஏற்றங்கள் செப்ப வாழ்வோம்
போற்றும் நம் விழுமியத்தை
புகட்டும் நம் விழாவின் காப்பை
ஏற்றிட வாழ்தலே முறைமையாகும்

பண்டிகைப் பண்பும் மொழிக்கு
பலவகை சரிதம் செப்பும்
ஒற்றுமை வேரை ஊன்றும்
விருந்தோம்பல் பண்பில் ஒன்றி
வேற்றுமை விலத்தி நிற்கும்
வாழ்த்துக்கள் கூறி அன்பை
மனதிடை மகிழ்ச்சி நிறைக்கும்
புத்தாடை அணிந்து கூடி
புதுமைக்குள் நிறையும் ஆற்றல்
விழாக்களின் விந்தையாகும்
வித விதமாய் விழாக்கள் மாறும்.

நன்றி
அனைவருக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

பட்டா

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

Continue reading

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading