வசந்தா ஜெகதீசன்

அதனிலும் அரிது….
பகுத்தறிவு மிகையாகும் பண்பாடும் உலகாளும்
எடுத்தஅடி வியப்பாகும் ஏற்றமே மிளிர்வாகும்
தொடுத்திடும் மலர்ப்பூக்கள் மாலையாய் உருமாறும்
தொன்மையின் விவசாயம் தொப்புளின் கொடியாகும்
எண்ணற்ற முகிழ்ப்பினை உணவற்ற யுகத்தினை
உயிர்ப்பிக்கும் விளைபயிரே உலகிற்கு மூலதனம்
நோயற்ற வாழ்விற்கு ஈடேது இணையேது
ஏதிலியின் தளம்பலுக்கு உதவுகின்ற கரம் நூறு
நட்பென்ற நயத்திலே நம்பிக்கைப் பலத்திலே
ஊற்றாகும் உணர்வுக்கும் உரிமையின் உறவுக்கும் மேலாக ஏதுண்டு
மிளிர்கின்ற வாழ்வுண்டு
அதனிலும் அரிது மானிடராய் மதிப்பு
மாசின்றி மிளிரட்டும் மனிதத்தின் வாழ்வு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading