வசந்தா ஜெகதீசன்

அதனிலும் அரிது….
பகுத்தறிவு மிகையாகும் பண்பாடும் உலகாளும்
எடுத்தஅடி வியப்பாகும் ஏற்றமே மிளிர்வாகும்
தொடுத்திடும் மலர்ப்பூக்கள் மாலையாய் உருமாறும்
தொன்மையின் விவசாயம் தொப்புளின் கொடியாகும்
எண்ணற்ற முகிழ்ப்பினை உணவற்ற யுகத்தினை
உயிர்ப்பிக்கும் விளைபயிரே உலகிற்கு மூலதனம்
நோயற்ற வாழ்விற்கு ஈடேது இணையேது
ஏதிலியின் தளம்பலுக்கு உதவுகின்ற கரம் நூறு
நட்பென்ற நயத்திலே நம்பிக்கைப் பலத்திலே
ஊற்றாகும் உணர்வுக்கும் உரிமையின் உறவுக்கும் மேலாக ஏதுண்டு
மிளிர்கின்ற வாழ்வுண்டு
அதனிலும் அரிது மானிடராய் மதிப்பு
மாசின்றி மிளிரட்டும் மனிதத்தின் வாழ்வு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading