அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தொன்மைக்கு புடமிடும்
தொடர்வாழ்விற்கு வழியிடும்
வழிகாட்டல் தொடராகும்
வரலாறு பதிவாகும்

ஆதியின் முதற்குடியாய்
அடித்தளத் தமிழ்க்குடி
பாரம்பரியத்தின் விதைப்பிடல்
பண்பாட்டு பகிர்வுகள்
விழுமியத்தின் வேராகும்
வீறுகொள் வாழ்வாகும்
காலத்தின் சுழற்சியில்
கருக்கொள் சிந்தையில்
பாரம்பரியமே பண்பாட்டு வேதம்
தலைமுறை தாங்கும் தனித்துவ
கீதம்.
நாளைய உலகில் நம்பிக்கை வாழும்.!.
நன்றி..
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan