மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மூண்ட தீ…
வானுயர்ந்த வளர்ந்தோங்கி
வரலாற்றை தான் தாங்கி
யாழ்நகரின் மகுடமென
நூல்களின் தேட்டமென
கற்பதற்குச் சான்றாக
கருத்துரைக்கும் மன்றாக
ஆசியக் கண்டமதில்
பெயரோடு பூத்திருந்த
பெருந்தகைகள் பேறனாய்
பெருமையில் நிமிர்வாய்
மூண்ட தீக்குள் இரையானாய்
முற்றாக தகர்ந்தொழிந்தாய்
மாண்டார்கள் பலராய்
மதியற்ற செயலோடு
இன்னமும் ரணமாகி
தமிழினத்து தலைத்தூணாய்
சாம்பலின் மேடனாய்
ஈட்டியாய் தைக்கிறது
இதயத்தின் வலியிலே
அழிவாகி அடிசாய்ந்த
நூல்களின் குமுறல்கள்
காத்திடமாய் மீள் எழும்பி
கட்டியம் கூறிநிற்கும்
நூலகத்து வரலாறு
தமிழினத்து தடம்பதிப்பு
தரணியெங்கும் ஒன்றிணைப்பு.
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading