வசந்தா ஜெகதீசன்

பசுமை…
பசுமைக் கோலம் பரந்த உலகில்
பயிரின வானம் படரும் எழில்
வாழ்வியல் வரத்தின் கொடையே
வறுமை துரத்தும் உலகே
மழைத்துளி தூறலின் மதிப்பாய்
மண்ணிலம் பூக்கும் உழைப்பாய்
மானிடம் வாழும் உயிர்ப்பாய்
மகிழ்வின் தரிப்பிடம் பசுமை
ஆளுமே உலகினை போர்த்தி
அவரவர் வாழ்வினை உயர்த்தி
பாரே உனக்குள் அடைக்கலம்
உருளும் உலகின் தரிப்பிடம்
பசுமை குன்றின் உணவேது
பாரின் செழிப்பிற்கு வழியேது
உலகைக் காக்கும் எஜமான்.நீ
உம்மைக் காப்பது எம் கடனே
தருவை நாட்டி தரணிக் காத்து
பசுமை உலகில் பயணிப்போம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading