சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பசுமை…
பசுமைக் கோலம் பரந்த உலகில்
பயிரின வானம் படரும் எழில்
வாழ்வியல் வரத்தின் கொடையே
வறுமை துரத்தும் உலகே
மழைத்துளி தூறலின் மதிப்பாய்
மண்ணிலம் பூக்கும் உழைப்பாய்
மானிடம் வாழும் உயிர்ப்பாய்
மகிழ்வின் தரிப்பிடம் பசுமை
ஆளுமே உலகினை போர்த்தி
அவரவர் வாழ்வினை உயர்த்தி
பாரே உனக்குள் அடைக்கலம்
உருளும் உலகின் தரிப்பிடம்
பசுமை குன்றின் உணவேது
பாரின் செழிப்பிற்கு வழியேது
உலகைக் காக்கும் எஜமான்.நீ
உம்மைக் காப்பது எம் கடனே
தருவை நாட்டி தரணிக் காத்து
பசுமை உலகில் பயணிப்போம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan