வசந்தா ஜெகதீசன்

பசுமை…
பசுமைக் கோலம் பரந்த உலகில்
பயிரின வானம் படரும் எழில்
வாழ்வியல் வரத்தின் கொடையே
வறுமை துரத்தும் உலகே
மழைத்துளி தூறலின் மதிப்பாய்
மண்ணிலம் பூக்கும் உழைப்பாய்
மானிடம் வாழும் உயிர்ப்பாய்
மகிழ்வின் தரிப்பிடம் பசுமை
ஆளுமே உலகினை போர்த்தி
அவரவர் வாழ்வினை உயர்த்தி
பாரே உனக்குள் அடைக்கலம்
உருளும் உலகின் தரிப்பிடம்
பசுமை குன்றின் உணவேது
பாரின் செழிப்பிற்கு வழியேது
உலகைக் காக்கும் எஜமான்.நீ
உம்மைக் காப்பது எம் கடனே
தருவை நாட்டி தரணிக் காத்து
பசுமை உலகில் பயணிப்போம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading