வரமாகும் வாய்ப்புகளே ( 751) 26.02.2026

செல்வி நித்தியானந்தன் வரமாகும் வாய்ப்புகளே இயற்கையின் கொடையில் வளமான வாய்ப்புகள் இறைவனின் படைப்பில் பிறப்புஇறப்பு நியதிகள் வாழ்வு என்பதும் வரமான...

Continue reading

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கனவுக்கதவுகள்…..
மனதில் உறைந்துள்ள மறவாத பொக்கிசம்
கனவென உருவினை மாற்றிடும் சித்திரம்
எண்ணத்தின் வனப்பினை ஏற்றமாய் தீட்டிடும்
கதவுக்குள் அடைப்பட்ட காவியப் பொக்கிசம்
உருளும் உலகினை உள்ளத்தில் புதைத்திடும்
எண்ணத்தின் கதவுகள் எரிகின்ற தீபங்கள்
ஏற்றத்தின் உளியாய் உழைக்கின்ற செதுக்கல்கள்
மீட்டலில் சிலையினை வெளிப்படலாக்கும்
மீளவும் கனவினை கதவெனத் திறக்கும்
ஆழியின் வழியில் ஆயிரம் கோடுகள்
அகத்தின் உராய்வே ஆழத்தின் உணர்வு
காலத்தின் திறப்பாய் கம்பீரம் கொண்டது
ஞாலத்தின் பரப்பில் நம்பிக்கை வளர்ப்பது
ஆசையின் உறைவிடம் ஆலயம் போன்றது
கனவின் கதவுகள் வெளிபடல் செய்வது
வெல்வோம் என்பதே வெற்றியைத் தருவது
வெளிப்படல் செய்திட கனவுகள் அவசியம்
கதவுகள் போல வாழ்வது அடித்தளம்
காலத்தின் தெளிவே கனிவுறும் வெற்றி.
நன்றி வசந்தா ஜெகதீசன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading