வருகை உனது..

சிவதர்சனி இரா
வியாழன் கவி 2199..
வருகையோ உனது..!!

இதற்கையின் அழகியல் கண்டு
இதயமும் நெகிழ்வதும் உண்டு
இறைவனின் ஆணையோ என்று
நிறைவது கொள்வது மனசு…

தேனென இனிக்கும் ஓர் குரல்
தென்றலின் இயல்பினைத் தந்து
ஈர்ப்பது விழிகளில் பூண்டு
இன்னுமாய் தொடர்வது மகிழ்வு..

அன்பெனும் ஆயுதம் தாங்கி
அனுதினம் இழைத்திடும் நூலால்
அகத்தினைக் கட்டுதல் நியாயமோ
ஆதவன் ஒளியெனத் தோன்றுதோ..
சிவதர்சனி இராகவன்
28/8/2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading