06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
வளமாக்கும் உழைப்பு
வேர்வை சிந்தி உழைக்கின்றான்
வேரின் மைந்தன் இவனன்றோ!
கூர்மை வாழ்வின் குணவாளன்
குடும்பம் காக்கும் தொழிலாளி!
நேர்மை உழைப்பு நெஞ்சினிலே
நேசம் வைத்து வாழ்பவனாம்
பாரே போற்றும் பண்பாளன்
பலமே கொடுப்போம் உழைப்புக்கே!
வயலை உழுது வளமாக்கி
வண்ணப்பயிரைச் செழிப்பாக்கி
அயர்வை தமக்குள் காட்டாமல்
அல்லும் பகலும் உழைப்பவனே!
உயர்வை வாழ்வின் குறிக்கோளாய்
உண்மை உழைப்பைப் பலமாக்கி
தயவாய் பயிரைத் விளைவித்தே
தரணி போற்றும் நல்லோனே!
நகுலா சிவநாதன்! 1760
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.