வளமாக்கும் உழைப்பு

வளமாக்கும் உழைப்பு

வேர்வை சிந்தி உழைக்கின்றான்
வேரின் மைந்தன் இவனன்றோ!
கூர்மை வாழ்வின் குணவாளன்
குடும்பம் காக்கும் தொழிலாளி!
நேர்மை உழைப்பு நெஞ்சினிலே
நேசம் வைத்து வாழ்பவனாம்
பாரே போற்றும் பண்பாளன்
பலமே கொடுப்போம் உழைப்புக்கே!

வயலை உழுது வளமாக்கி
வண்ணப்பயிரைச் செழிப்பாக்கி
அயர்வை தமக்குள் காட்டாமல்
அல்லும் பகலும் உழைப்பவனே!
உயர்வை வாழ்வின் குறிக்கோளாய்
உண்மை உழைப்பைப் பலமாக்கி
தயவாய் பயிரைத் விளைவித்தே
தரணி போற்றும் நல்லோனே!

நகுலா சிவநாதன்! 1760

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading