ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வாணியின் வளவு

ராணி சம்பந்தர்

வாணியின் வளவு
பெரியதோர் காணி
நாணிக் கோணியே
தோணியிலேறியபடி
வலித்து வலித்துச்
உள்ளே சென்றாள் வேணி

கடல் போல ஒரே வெள்ளம்
உடைந்த வீட்டுச் சுவரிலே
தொங்கி இருந்து ஆணியில்
சின்ன வயதில் ராணி, மணி

பென்னம் பெரிய அரண்மனை
அன்னம் உண்ண சுற்றி வரவே
இருந்த முற்றமதை மாட்டுச்சாணி
தெளித்துப் பேணி வளர்த்த பாணி

சன்னம் துழைத்த கொத்துக் குண்டு
துவாரமிட்ட சுவர்களில் அரை குறைக்
கதவில் அழுத படி தொங்கிக்கொண்டு
பார்க்கும் சுவாமிப் படமும் அனாதை
போலக் கிடக்குதே வாணி வளவில் .

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading