வாணியின் வளவு

ராணி சம்பந்தர்

வாணியின் வளவு
பெரியதோர் காணி
நாணிக் கோணியே
தோணியிலேறியபடி
வலித்து வலித்துச்
உள்ளே சென்றாள் வேணி

கடல் போல ஒரே வெள்ளம்
உடைந்த வீட்டுச் சுவரிலே
தொங்கி இருந்து ஆணியில்
சின்ன வயதில் ராணி, மணி

பென்னம் பெரிய அரண்மனை
அன்னம் உண்ண சுற்றி வரவே
இருந்த முற்றமதை மாட்டுச்சாணி
தெளித்துப் பேணி வளர்த்த பாணி

சன்னம் துழைத்த கொத்துக் குண்டு
துவாரமிட்ட சுவர்களில் அரை குறைக்
கதவில் அழுத படி தொங்கிக்கொண்டு
பார்க்கும் சுவாமிப் படமும் அனாதை
போலக் கிடக்குதே வாணி வளவில் .

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading