நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

வாணியின் வளவு

ராணி சம்பந்தர்

வாணியின் வளவு
பெரியதோர் காணி
நாணிக் கோணியே
தோணியிலேறியபடி
வலித்து வலித்துச்
உள்ளே சென்றாள் வேணி

கடல் போல ஒரே வெள்ளம்
உடைந்த வீட்டுச் சுவரிலே
தொங்கி இருந்து ஆணியில்
சின்ன வயதில் ராணி, மணி

பென்னம் பெரிய அரண்மனை
அன்னம் உண்ண சுற்றி வரவே
இருந்த முற்றமதை மாட்டுச்சாணி
தெளித்துப் பேணி வளர்த்த பாணி

சன்னம் துழைத்த கொத்துக் குண்டு
துவாரமிட்ட சுவர்களில் அரை குறைக்
கதவில் அழுத படி தொங்கிக்கொண்டு
பார்க்கும் சுவாமிப் படமும் அனாதை
போலக் கிடக்குதே வாணி வளவில் .

Nada Mohan
Author: Nada Mohan