இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வாழ்வில் கலையும் தொடரா நிலை

வஜிதா முஹம்மட்

வாழ்வில் கலையும்
தொடரா நிலை

பண்பாட்டுப் பெ௫மை
பாங்குடன் மிளிர்௫ம்

பழமைக்குள் இனிமை
பலகதை சொல்லி௨ய௫ம்

கூடிய குடும்ப ௨றவுக்குள்
கூட்டுறவு கலைகளை வளர்கும்

வறுமையிலும் வாழ்க்கையை
வாழ்ந்து ரசித்தோம்

வாழவில்லை நாம் எப்போ
வாழ்வது போல் நடிக்கின்றோம்
இப்போ

வாழ்வில் கலையும்
தொடரா நிலை

பண்பாட்டுப் பெ௫மை
பாங்குடன் மிளிர்௫ம்

பழமைக்குள் இனிமை
பலகதை சொல்லி௨ய௫ம்

கூடிய குடும்ப ௨றவுக்குள்
கூட்டுறவு கலைகளை வளர்கும்

வறுமையிலும் வாழ்க்கையை
வாழ்ந்து ரசித்தோம்

வாழவில்லை நாம் எப்போ
வாழ்வது போல் நடிக்கின்றோம்
இப்போ

புதுமைக்குள் வீழ்ந்தோம்
பழமையை மறந்தோம்

தனிமை வாழ்வினை ரசித்தோம்
தள்ளியே ௨றவுகளைப் பிரித்தோம்

கலையோடு வாழ்ந்தோம் அன்று
கடனோடு வாழ்கின்றோம் இன்று

வில்லுப் பாட்டு, அன்று
வீடியோ ஆனது இன்று

மானாட்டம் மயிலாட்டம்
கோலாட்டம் அன்று
அரை குறை ஆடையாய்
டிஸ்கோ ஆனது இன்று

கிட்டிப் பொல்லும் கிளித்தட்டும்
அன்று
காணாமல் போனது இன்று
கிறிகட்டும் கால்பந்தாட்டமும்
களம் இறங்கியது

சிலம்பாட்டம் தலையணை அடித்தழும்
ஓடியே மறைந்தது
கராத்தே குத்துச் குதித்து
வந்தது இன்று

அந்நியமோகம் நவீனத்தின்
ஆதிக்கம்
கலைநயம் கொண்ட அழகிய
ஆரோக்கிய வாழ்வை

ஆதாரனை செய்கின்றோம்
கிணற்றை மூடிவிட்டு
கிடைக்கும் போர்த்தல் தண்ணீீர்
போல வரமான வாழ்வியல்

கலைகள் தொடராத நிலைதே
நாகரீகப் பரிமாண வளர்ச்சி
இதனாலே தூரமானது எம் கலை
நிகழ்ச்சி

கூனிக்குனிந்து அடித்த
மேளதாளம்
கூடி கூட்டாய் நாவிசைபோட்ட
குரவை எங்கே தேடுகின்றேன்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading