விடியாத இரவொன்று

விடியாத இரவொன்று

கலையாத நினைவு கரைகாணமுடியாத கொள்கை
சளையாத நெஞ்சம் சுளையான எண்ணம்
புலராத பொழுதும் இன்பமில்லாத இரவும்
பூகம்பம் வாழ்வினிலே புரட்சியாய் மேவிநின்றிட

ஆதங்கம் தெரியாமல் அவலங்கள் என்றுமே

மேளங்கள் கொட்டாமல் மழையும் பொழிந்திட
தாளங்கள் இல்லாமல் தம்பட்டம் அடித்திட
கோலங்கள் குலையாமல் குமரிப் பெண்ணிருந்தாள்
பாலங்கள் போட்டனர் பாதையை மூடினர்
சாபங்கள் போட்டதால் சாகித்தியம் அழிந்தது

சோகமும் கூடின சோலைக்குயில் அடங்கியது

மணமேடைகான மகிழ்வுடன் இருந்தவேளை
பிணமேடையில் மாப்பிளை கொலுவிருந்தான் நேற்று
விடியாத இரவினிலே விழித்திருந்தாள் பேதை

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading