நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

விடியாத இரவொன்று

விடியாத இரவொன்று

கலையாத நினைவு கரைகாணமுடியாத கொள்கை
சளையாத நெஞ்சம் சுளையான எண்ணம்
புலராத பொழுதும் இன்பமில்லாத இரவும்
பூகம்பம் வாழ்வினிலே புரட்சியாய் மேவிநின்றிட

ஆதங்கம் தெரியாமல் அவலங்கள் என்றுமே

மேளங்கள் கொட்டாமல் மழையும் பொழிந்திட
தாளங்கள் இல்லாமல் தம்பட்டம் அடித்திட
கோலங்கள் குலையாமல் குமரிப் பெண்ணிருந்தாள்
பாலங்கள் போட்டனர் பாதையை மூடினர்
சாபங்கள் போட்டதால் சாகித்தியம் அழிந்தது

சோகமும் கூடின சோலைக்குயில் அடங்கியது

மணமேடைகான மகிழ்வுடன் இருந்தவேளை
பிணமேடையில் மாப்பிளை கொலுவிருந்தான் நேற்று
விடியாத இரவினிலே விழித்திருந்தாள் பேதை

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan