விடைகொடு விடைகொடு மார்கழியே

சர்வேஸ்வரி சிவரூபன்

விடைகொடு விடைகொடு மார்கழியே __ என்
மார்கழியே
மீண்டுமோ வருவாய் ஓய்வெடுத்து __உன்

குளிமையினாலே மண்குளிரும் மனம் களிக்க நின்றவளே
மலர்வனமாக்கும் பூங்கொடியே __ என்றும்

அனுதினம் உன்புகழ் வீசிடுமே
அகிலத்தில் ஆனந்தம் உன்வரவே
ஆடும் நெஞ்சுக்கு ஆறுதல் தந்தவளே

இத்தரை மலரநின்றவளே இகமெல்லாம் ஆளும் பெண்மயிலே

மகிமையின் மாதம் மார்கழியில்
அஞ்சனை மகனும் தானுதித்தான்

வீரமைந்தனை நீகண்டாய் விழுமியங்களைக் காத்து நின்றாய்

திருவாசக ஊற்றைப் பாடவைத்தே பீடுடைய பிரமா புரம்மேவ வைத்தாய்

திருமகளே விடையழித்து வினையமின்றிக் காத்திடுவாய்

விடைகொடு விடைகொடு மார்கழியே

சிவா ஈஸ்வரி
சர்வேஸ்வரி சிவரூபன்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading