பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

விடைகொடு விடைகொடு மார்கழியே

சர்வேஸ்வரி சிவரூபன்

விடைகொடு விடைகொடு மார்கழியே __ என்
மார்கழியே
மீண்டுமோ வருவாய் ஓய்வெடுத்து __உன்

குளிமையினாலே மண்குளிரும் மனம் களிக்க நின்றவளே
மலர்வனமாக்கும் பூங்கொடியே __ என்றும்

அனுதினம் உன்புகழ் வீசிடுமே
அகிலத்தில் ஆனந்தம் உன்வரவே
ஆடும் நெஞ்சுக்கு ஆறுதல் தந்தவளே

இத்தரை மலரநின்றவளே இகமெல்லாம் ஆளும் பெண்மயிலே

மகிமையின் மாதம் மார்கழியில்
அஞ்சனை மகனும் தானுதித்தான்

வீரமைந்தனை நீகண்டாய் விழுமியங்களைக் காத்து நின்றாய்

திருவாசக ஊற்றைப் பாடவைத்தே பீடுடைய பிரமா புரம்மேவ வைத்தாய்

திருமகளே விடையழித்து வினையமின்றிக் காத்திடுவாய்

விடைகொடு விடைகொடு மார்கழியே

சிவா ஈஸ்வரி
சர்வேஸ்வரி சிவரூபன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading