வீழ்ந்த போதும் வாழ்ந்து காட்டு

சிவதர்சனி இராகவன் வீழ்ந்த போதும்
வாழ்ந்து காட்டு …!
வீழ்வதால் பெருமை
கொள்ளும் நீர்விழ்ச்சி
வீழ்ந்தது என்று
கனிகள் வருந்துமோ
விழுந்தால் மண்ணில்
உரமாகும் இலையும்
விழுவது தவறல்ல
வாழ்ந்துகாட்டுதல்
வரமாகும் !
கடலில் விழும்
மழைத்துளி பாரும்
முத்தாகி ஒளிரும்
அதிசயம் ஆகும்
போரும் வெற்றியும்
வீழ்ச்சியின்றி
சாத்தியமா
வீழ்ந்தபோதும்
நீ வாழ்ந்து
காட்டு …!!!!
###சிவதர்சினி ராகவன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading