வெளிநாடும் படும்பாடும்

ஜெயம்
காலையில் எழுப்பும் மணி தன் பணியை செய்ய
திடுக்கிட்டு முழிச்சு கண்ட கனவையும் முடிக்காமல்
காலைக்கடன்களை முடிச்சு வேலைக்குச் செல்ல ஆயத்தம்

தாயகத்திலிருந்து தொலைபேசி அம்மாதான் பெயர் மின்னியது
உள்ளே என் இதயத்தின் சுருங்கி விரிதல் அதிகரித்தது
பாசம் பொழிய எடுத்த காலம்போய் இப்போ காசை பிழிய
குசினிக்குள் இருந்து மனைவியும் யாரப்பா அது

அம்மா உடன்பிறந்தவர்கள் கஷடப்படுகின்றார்கள் என ஒப்பாரி
அதே வசனங்கள் அதே பஞ்சப்பாட்டு
பெருமூச்சை சத்தமாக விட்டார்
என்னை அவர் பணம் காய்க்கும் மரமெனவே நம்பிவிட்டார்

அடுத்த பிறவியில் நிச்சயமாக புலம்பெயர் வாழ்க்கைக்கு என்னை இரையாக்கமாட்டேன்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading