” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வெளிநாடும் படும்பாடும்

ஜெயம்
காலையில் எழுப்பும் மணி தன் பணியை செய்ய
திடுக்கிட்டு முழிச்சு கண்ட கனவையும் முடிக்காமல்
காலைக்கடன்களை முடிச்சு வேலைக்குச் செல்ல ஆயத்தம்

தாயகத்திலிருந்து தொலைபேசி அம்மாதான் பெயர் மின்னியது
உள்ளே என் இதயத்தின் சுருங்கி விரிதல் அதிகரித்தது
பாசம் பொழிய எடுத்த காலம்போய் இப்போ காசை பிழிய
குசினிக்குள் இருந்து மனைவியும் யாரப்பா அது

அம்மா உடன்பிறந்தவர்கள் கஷடப்படுகின்றார்கள் என ஒப்பாரி
அதே வசனங்கள் அதே பஞ்சப்பாட்டு
பெருமூச்சை சத்தமாக விட்டார்
என்னை அவர் பணம் காய்க்கும் மரமெனவே நம்பிவிட்டார்

அடுத்த பிறவியில் நிச்சயமாக புலம்பெயர் வாழ்க்கைக்கு என்னை இரையாக்கமாட்டேன்

Nada Mohan
Author: Nada Mohan