தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

வேல்கம்பு கையிலேந்தி வீரமாகப் போறவரே..

வேல்கம்பு கையிலேந்தி வீரமாகப் போறவரே..
களத்து மேட்டுக்கு கலகலனு போகையிலே
போருக்குப் போறதொரு வீறாப்பு ஏதுக்கோ
வெறுப்பாய் பாக்கிறியே வெகுமதி கிடைக்கலையா
இதமாய் பேசுறேனே முறைப்பாய் பாக்கிறியே
உப்பட்டி குவிக்கவே மாமாவே வாரேனே
சேர்ந்தே நிற்போமே செமையாக இருக்குமே
காத்துமே இருக்கேனே கைபிடிக்க வருவாயென்னு
உப்புக்காத்துப் பட்டுமே உப்பியும் போறேனே
சித்தம் உணர்வாயே சீக்கிரமே பதியாக
வற்றிய குளத்திலே மீனுமோ வாழுமோ
பற்றியே நின்ன பாசமும் என்னாச்சு
எந்தன் கேள்விக்குப் பதிலையுமோ சொல்விடு
உன்னையும் நினைக்கும் உள்ளமும் உனக்கே

சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading