வேல்கம்பு கையிலேந்தி வீரமாகப் போறவரே..

வேல்கம்பு கையிலேந்தி வீரமாகப் போறவரே..
களத்து மேட்டுக்கு கலகலனு போகையிலே
போருக்குப் போறதொரு வீறாப்பு ஏதுக்கோ
வெறுப்பாய் பாக்கிறியே வெகுமதி கிடைக்கலையா
இதமாய் பேசுறேனே முறைப்பாய் பாக்கிறியே
உப்பட்டி குவிக்கவே மாமாவே வாரேனே
சேர்ந்தே நிற்போமே செமையாக இருக்குமே
காத்துமே இருக்கேனே கைபிடிக்க வருவாயென்னு
உப்புக்காத்துப் பட்டுமே உப்பியும் போறேனே
சித்தம் உணர்வாயே சீக்கிரமே பதியாக
வற்றிய குளத்திலே மீனுமோ வாழுமோ
பற்றியே நின்ன பாசமும் என்னாச்சு
எந்தன் கேள்விக்குப் பதிலையுமோ சொல்விடு
உன்னையும் நினைக்கும் உள்ளமும் உனக்கே

சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading