நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

வேல்கம்பு கையிலேந்தி வீரமாகப் போறவரே..

வேல்கம்பு கையிலேந்தி வீரமாகப் போறவரே..
களத்து மேட்டுக்கு கலகலனு போகையிலே
போருக்குப் போறதொரு வீறாப்பு ஏதுக்கோ
வெறுப்பாய் பாக்கிறியே வெகுமதி கிடைக்கலையா
இதமாய் பேசுறேனே முறைப்பாய் பாக்கிறியே
உப்பட்டி குவிக்கவே மாமாவே வாரேனே
சேர்ந்தே நிற்போமே செமையாக இருக்குமே
காத்துமே இருக்கேனே கைபிடிக்க வருவாயென்னு
உப்புக்காத்துப் பட்டுமே உப்பியும் போறேனே
சித்தம் உணர்வாயே சீக்கிரமே பதியாக
வற்றிய குளத்திலே மீனுமோ வாழுமோ
பற்றியே நின்ன பாசமும் என்னாச்சு
எந்தன் கேள்விக்குப் பதிலையுமோ சொல்விடு
உன்னையும் நினைக்கும் உள்ளமும் உனக்கே

சர்வேஸ்வரி சிவரூபன்

Author: