28 இல் இனிய பதியம்

நகுலா சிவநாதன்

28 இல் இனிய பதியம்

அகவை 28 இல் அடிபதிக்கும்
இலண்டன் தமிழே!
உவகையுடன் வாழ்த்துவதில்
உன்னத மகிழ்வு

எழுத்தில் பூத்தது
எண்ணத்தில் விளைந்தது
ஏற்றத்தின் மகிழ்வில்
மாற்றம் கண்டது

பாமுகம் ஆனது
பூமுகம் கண்டது
நாமுகப்பரப்பிலே
நம்தமிழ் வாழுது

28 வருடம் இனிதாய்
ஒளிர்ந்திட
இன்பமுடன் வாழ்த்துகிறேன்
பார்போற்ற வாழ்க!

காணெளி வந்தது
கருத்துகள் மாறின
காட்சியும் கண்டது
காலத்தின் மாற்றத்தில்

பதியம் 28
பாரில் முதன்மை
பல்லாண்டு வாழ்க!
சொல்லாண்டு காண்க!

நகுலா சிவநாதன்1811

Nada Mohan
Author: Nada Mohan