” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

28 இல் இனிய பதியம்

நகுலா சிவநாதன்

28 இல் இனிய பதியம்

அகவை 28 இல் அடிபதிக்கும்
இலண்டன் தமிழே!
உவகையுடன் வாழ்த்துவதில்
உன்னத மகிழ்வு

எழுத்தில் பூத்தது
எண்ணத்தில் விளைந்தது
ஏற்றத்தின் மகிழ்வில்
மாற்றம் கண்டது

பாமுகம் ஆனது
பூமுகம் கண்டது
நாமுகப்பரப்பிலே
நம்தமிழ் வாழுது

28 வருடம் இனிதாய்
ஒளிர்ந்திட
இன்பமுடன் வாழ்த்துகிறேன்
பார்போற்ற வாழ்க!

காணெளி வந்தது
கருத்துகள் மாறின
காட்சியும் கண்டது
காலத்தின் மாற்றத்தில்

பதியம் 28
பாரில் முதன்மை
பல்லாண்டு வாழ்க!
சொல்லாண்டு காண்க!

நகுலா சிவநாதன்1811

Nada Mohan
Author: Nada Mohan