” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

ஒளவை

இலக்கு
————
இலக்கு நோக்கி இயங்கும் மனமே
உலகில் என்றும் உயர்வு உனதே
விலங்கை உடைத்து விண்ணைத் தாண்ட
கலக்கம் இன்றிக் கடினம் ஏற்பாய்

குலத்தின் பெருமை குன்றும் வகையில்
பலத்தைக் காட்டும் பண்பு வேண்டாம்
இலட்சம் கோடி இலாபம் தரினும்
இலட்சிய நோக்கை இம்மியும் விலக்காய்

நிலவைப் போல ஒளியைத் தந்து
துலங்கச் செய்யும் தூய இலக்கு
சலனம் இல்லாச் சிந்தை கொண்டால்
விலகும் உந்தன் தோல்விப் படிகள்

மலரும் உந்தன் மனதின் சிரிப்பில்
புலரும் பொழுது புதுமை காணும்
பலரும் சொல்லும் பழிகள் ஒதுக்கு
நலமாய்த் தொடரும் நாளை விடியல்.

ஔவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading