நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம்
இது வியாழன் கவிதை நேரம்.
******** முருகன், வேலன், கந்தன்*
————+——+++—–+————-
அறுபடை வீடு, அமர்ந்திருக்கும் முருகன்.- அவர்
அன்பர் உள்ளம் , கொள்ளை கொள்ளும் அழகன்.

முத்தமிழின் முகவரியாய், பவனி வரும் கந்தன்.
தண்டத்தை ஏந்திக், தரணி ஆளும் தனையன்.

வேல் கொண்டு , வீரத்தினை, விண்ணவரும் மண்ணவரும் , அறிய வைத்தவர்.
வேலினைக் கொண்டே , வெற்றிவாகை சூடிய வேலவர்.

சூரனைக் கூறு செய்து, சேவலும் மயிலும் , ஆக்கிய செந்தூரான்.
சீர் ஓங்க அறிவு தரும், சிங்காரத் தேவன் மலைச் சிவபாலன்.
அன்னையின் சக்தியை, அகிலமே அறிய வைத்த, அகிலாண்டேஸ்வரி மைந்தன்.
அன்புடை மைந்தராய், உயர்ந்த நல் குருவாய், ஆசைமிகு சோதரனாய் , மகிழ்ச்சி தரும் பெருமானார்.
முருகன், வேலன், கந்தன்
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan