நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

ஆதியின் மரபு…
காலச் செதுக்கலில் கணதி பெருகுது
ஞாலமன்றிலே நவீனம் வளருது
கருவி உலகென காத்திடம் பெறுகுது
நடையது குன்றிட நோயும் நிறையுது

வாழும் வரவிலே வற்றாத நதி
ஆழம் நிறைந்தது ஆதியின் நெறி
உரலும் உழக்கையும் உடல்வள உறுதி
அம்மியும் குழவியும் உடற்பயிற்சியின் தகுதி
அரைத்த உணவு ஆரோக்கிய மிகுதி
விறகு அடுப்பின் ஊதும் கலையில்
சுவாசத்தின் பை சுருங்கி விரியுமே

காய்கறி கீரை இயற்கை உணவு
நோய்நொடியற்றதாய் நீண்டபொழுது
கிணற்றிலே நீர் அள்ளி இறைத்து
கிடைக்குமா இங்கு ஆதியின் மரபு
இயந்திர அடிமையாய் இயங்குதே வாழ்வு
நிரந்தர நிரம்பலில் நிறையுதே உலகு.
நன்றி

குரலிணைக்கும் சகோதரி க்கும், தட்டிக்கொடுப்பில் உற்சாகம் தரும்
நெறியாளருக்கும் மனமார்ந்த நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan