சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்னபள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.

சந்தம் சிந்தம் சந்திப்பு இலக்கம்:28 கவி தலைப்பு: அறுந்து கிடக்கும் தொப்புள்கொடி உறவுகள்
நாள்: 01.02.22

மடிந்து போன மக்களும் தொலைந்து போன
சொந்தங்களும்

மறந்து போன மண்ணையும் அழிந்து போன உறவையும் என்றும் நெஞ்சம் மறப்பதில்லை !

யுத்த களத்தில் ரத்தம் சிந்திய மாவீரன் மரணம் ஓய்ந்தது!

மானம் காக்க மங்கை கத்திய கதறல் அம்பாக பாய்ந்தது!

ஓயாத கடல் அலைபோல்
விட்டு வந்த தொப்புள் கொடி சொந்தம் !
வீதியில் வீசி விதையாய் முளைத்து நிற்க!

கட்டித்தழுவ முடியாமல் !
கடல் கடக்கத் தெரியாமல்_ எங்கள் இரவுகள் இன்னும் விடியாமல்!
காத்திருக்கும் தொப்புள்கொடி உறவுகள்!

நன்றி! வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan