சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம்.
*** குடுமி வாத்தியார் ***
———+———
நெற்றியிலே, நீளமான திருநீற்றுப் பட்டை .
நீளக் கைகொண்ட , நடுத்தர ரகமான சட்டை .

முன்புறம் வழித்தெடுத்த , பாதி வழுக்கை மண்டை .
பின்புறம் வடம் சுற்றினாற் போல , சரிந்து ஆடும் , அவர் கொண்டை .

பழுத்த சைவம், பரம்பரைப் , புகழ் பூத்த , பெரும் பிரசங்கி .
பலநூறு பாக்களுக்கும்,பயன் சொல்வார் அவர் , முழங்கி .

தொன்மைத் தமிழைத், துலங்கவே வைக்கும் , இதயத்தின் துடிப்பு .
வன்மையற்ற , வாயாடித்தனம் , வார்த்தையாலே விளையாடும், இலக்கணக் கோர்ப்பு .

அஞ்சா நெஞ்சுடையார், அகம்பாவம் ஏதும் அறியார் .
சொல்லால் சுட்டுமிலார், சுரண்டுவதை , அறிந்துமிலார் .
கல்லாரைக் கண்டாலும் , கடுகளவும், நிலை மாறார் .
பொல்லாரைக் கண்ணடாலும் ,தன், படி விட்டு , இறங்க மாட்டார் .
குடுமி வாத்தியார்
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan