பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:162
15/02/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
“கடலும் நானும்”
உடல் முழுவதும் நீல நிறம்
உமிழ்நீரோ வெள்ளை நிறம்
கடல் என்ற பெயரே சுகம்
கவிஞர் தமக்கு நீ ஓர் வரம்!

அருகில் வந்தால் ஆகா சுகம்
அமைதி வரும் நெஞ்சின் வசம்
எதிலும் இல்லா இன்ப சுகம்
ஏந்தி வருமே உந்தன் கரம்!

உனக்குள் தானே எத்தனை அழகு
உலகில் வேறு உண்டோ சொல்லு
கணக்கிலா உயிர்கள் வாழும் வீடு
கடலடிப் பூக்களும் சூழ்ந்திடும் கூடு!

உனக்கு உப்பில் ஏனிந்த மோகம்
உண்மை சொல் வேண்டாம் தாபம்
கணக்கின்றி ஏதும் இருந்தென்ன லாபம்
கண்மணி உன்னிடம் கேட்டிட ஆர்வம்!

எம்மவர் பலரை இழுத்தாய் அன்று
எமக்கு அதனால் வெறுப்பும் உண்டு
மண்ணவர் லட்சமாய் மடிந்தனர் அன்று
மனதினில் வந்ததை சொன்னேன் இன்று!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading