நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி !1588

விடியலின் உன்னதம்!

கடுகதி வாழ்வியல் கனதியில் உலகு
மிடுக்கொடு விடியல் மீட்டும் சுரமாய்
வடுக்களாய் இருளும் விலகியே ஓடும்
தடுப்பது யாரோ தகைமை இயற்கை!

கதிரவன் தண்ணொளி தந்திட வந்து
விதி வழி விழிதனை உயிர்ப்பிக்கும்
வினைத்திறன் வியப்பிலே விண்ணும்
விடுப்பினை இருளுக்குத் தருமே!

உழைப்பினில் ஊர்ந்திடும் ஓருயிரும்
உணர்வினில் தழைக்கும் மனிதனும்
தன்பணி ஏற்றுத் தலை நிமிரத்
திண்ணமாய் விடியலே காரணியாம்!

மரணிப்பு இல்லா வாழ்வெழுத ஈங்கு
மண்ணிலே எத்தனையோ தடங்கள்
மலர்ந்தே படைக்கும் படைப்புகளும்
புலரும் பொழுதால் புகழாகுமன்றோ
சிவதர்சினி இராகவன்
2/3/2022

Nada Mohan
Author: Nada Mohan