நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

3.3.22 வியாழன் கவி

விடியலில் உன்னதம் 181.

வெவ்வானம் விழி திறந்து
போர்வையை நீக்கி
காரினை விலக்கி
பரியில் ஏறி பகலவன் பவனி
விடியலுக்காய் விரைந்திடு

ஆவினம் ஆர்பரிக்க
புல்லினம் இசைத்திட
வண்டினம் ரீங்காரம் செய்ய
மலர்கள் இதழ் விரித்து
மணம் பரப்ப
பகலவன் செவ்வானில்
பவனிவர
விடியலின் வரவுக்காய்
உழவனும் ஏருடன் வயல் செல்ல
கூரையில் சேவல் கூவ
கோயில் மணி கேட்டதும்
அம்மா குளித்து இறைவனை
வணங்கி கடமைகளை செய்ய.

இனபேதமின்றி குழப்பங்கள் தீர
இனவெறியரின்
உக்கிர போரை நிறுத்தி
குறைகளை களைந்து விடியலில் உன்னதம் மகிழ்ந்திட
இறைவா இறைஞ்சி
துதிக்கிறோம் .

Nada Mohan
Author: Nada Mohan