இதுவும் கண் துடைப்பாயிடுமா ?

ராணி சம்பந்தர் எழுத்துக்களை எழுதிடப் பேனா எத்தனித்து ஏங்குகிறது எழுத முடியாமல் கைகள் ஏனோ நழுவி வீங்குகிறது நாட்டில் நடக்கும்...

Continue reading

மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கமலா ஜெயபாலன்

தென்றலின் குறும்பு
——————————
தொட்டுச் செல்லும் தொடராய் ஓடும்/
பட்டால் மேனியில் பரவசம் படரும்/
கட்டுக்குள் அடங்கா காதலினால் அவள்/
முட்டி மோதுவாள் மூர்கமாய் உலகில்/

புயலாய் பூமியிலே புரட்டிப் போடுவாள்/
இயற்கைச் சீற்றம் எண்ணவும்
முடியுமா/
கடலின் அலையுடன் கலந்து
வீசியே/
கலக்கி அடிப்பாள் கப்பலும்
தடுமாறும்/

உயிரைக் கொடுப்பாள் உயரைப் பறிப்பாள்/
உணர்வுடன் இருப்பாள்
உயிருள்ள வரையும்/
தென்றலின் குறும்பு
தெரிந்தே வாழ்கிறோம்/
நீயும் நானும்
ஒன்றாய் வாழ்வோம்/

வெப்பம் தணிக்கும்
மேனி குளிரும்/
தப்பாமல் உன்சுகம்
தரணிக்கு வேண்டும்/

Nada Mohan
Author: Nada Mohan