நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

கமலா ஜெயபாலன்

தென்றலின் குறும்பு
——————————
தொட்டுச் செல்லும் தொடராய் ஓடும்/
பட்டால் மேனியில் பரவசம் படரும்/
கட்டுக்குள் அடங்கா காதலினால் அவள்/
முட்டி மோதுவாள் மூர்கமாய் உலகில்/

புயலாய் பூமியிலே புரட்டிப் போடுவாள்/
இயற்கைச் சீற்றம் எண்ணவும்
முடியுமா/
கடலின் அலையுடன் கலந்து
வீசியே/
கலக்கி அடிப்பாள் கப்பலும்
தடுமாறும்/

உயிரைக் கொடுப்பாள் உயரைப் பறிப்பாள்/
உணர்வுடன் இருப்பாள்
உயிருள்ள வரையும்/
தென்றலின் குறும்பு
தெரிந்தே வாழ்கிறோம்/
நீயும் நானும்
ஒன்றாய் வாழ்வோம்/

வெப்பம் தணிக்கும்
மேனி குளிரும்/
தப்பாமல் உன்சுகம்
தரணிக்கு வேண்டும்/

Nada Mohan
Author: Nada Mohan