இரா விஜயகௌரி

அதனிலும் அரிது

அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
அதனினும் அரிது நோயின்றி வாழ்தலரிது
உடல்நலம் பேணுதல் அரிது
தினம் நெறிபட வாழ்தலுமரிது

வாழ்கின்ற கணங்களெலாம்- நாம்
உண்ணும் வகை நெறியாக்கி
உடற் பயிற்சி மன அயர்ச்சி- நிதம்
போக்கி வாழ்வமைத்தல் பெரும் செல்வம்

சேர்த்தபணம் வழிந்தொழுக – எத்
தொந்தி நிறை நோய். பெருகின்
மாத்திரைக்குள் உயிர் சுமக்கும்
பெருவலியால் நம் மனம் கனக்கும்

செல்வத்துள் பெருஞ்செல்வம்
நோயற்ற பெரு வாழ்வு உணர்வதில்லை
உணர்ந்த கணம் சூரியன் நிலைப்பதுண்டோ
மறைந்த பின்னே வணங்கிப்பயனென்ன

அதனால் உயிர் மூச்சின் உடல் நலத்தின்
பெரும் பயனை வாழ்ந்தவர்கள் வழிமொழிய
தலைமுறைக்கு. பெரும் சொத்தாய்
எழுதி வைப்போம். தொடர்ந்து வெல்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading