“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா வியாழன் கவிதை நேரம்..!! கவி-2161 “தாயுமானவர்”.. தாயுக்கும் தாயாகி சேயுக்கும் தாயாகித் தரணியிலே முதலானவர் தந்தை எனும் அற்புதமே.. கருவாகி உருவாகக் காரணி...

Continue reading

Selvi Nithianandan

மீளவும் வந்ததே
கோடை என்றாலே வந்திடும் மகிழ்வு
ஜாடை காட்டும் பூக்களின் சிறப்பு
கொண்டாட்டங்கள் மீண்டுமாய் மிடுக்குடன் நிகழ்வு
திண்டாட்டமாய் வந்திடும் கொரனாவின் அதிகரிப்பு

முகமூடி இல்லா கூட்டமாய் சேர்வு
கையுறை அற்ற கைகுழுக்கி பிரிவு
இருமல் தடிமன் மீண்டுமாய் சோர்வு
இதனாலும் இப்போ வந்திடும் சாவு

ஐரோப்பிய நாடுகளில் விடுமுறைச் சுற்றுலா
ஐயம் தவிர்த்து ஐக்கியமாய் கூடுதே
நிறுத்திய பயணங்கள் மீண்டும் தொடருதே
நீள்வரிசையாய் காத்திருந்து மக்களும் போகுதே

நான்காவது தடுப்பூசிக்காய் பலருக்கு அழைப்பு
நாட்டம் குறைந்து போதுமே எனும் நினைப்பு
நாடுகளிடை புதிய பெயருடன் வரவு
நானிலத்தில் தொலைந்துவிடு அருள்கொடு இறைவா

Nada Mohan
Author: Nada Mohan