நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 604

வேண்டும் வலிமை

குழந்தைகள் எல்லாம் செல்வங்கள் ஆகட்டும்
வளர்கின்ற போதே நம்பிக்கை பூக்கட்டும்
கூர்மையாகிப் புலன்கள் சிறப்பும் அடையட்டும்
ஆர்ப்பாட்டக் குழந்தையும் பன்மடங்காய்ப் படைக்கட்டும்

பிறந்த மழலையெல்லாம் சிறப்பின் வடிவம்தான்
சிறப்பான தேசத்தைக் கட்டும் ஆரோக்கியத்தூண்
ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உற்சாகத்தை விதைப்போம்
ஒவ்வாதெனும் எண்ணங்களை வேரோடு சிதைப்போம்

வலிமையை உண்டாக்குவது சவாலான விடயம்
கலைந்திட இறுக்கமும் நுழைந்திடும் விடையும்
குறைகளைக் காண்போர் குறைபாடு உள்ளோர்
அறிவினைத் திறப்பவர் சுமையாக நில்லார்

சித்தமது துணிந்திட்டால் அதுவே போதும்
புத்தியதில் விலகும் பயத்தின் பிடிவாதம்
அறிவின் அடிப்படையிலான பூலோக வாழ்வு
இறுக்கும் புலனிலும் மதியதன் நீள்வு

அவப்பெயரை பெயர்த்து எடுப்பதே வலிமை
அவமான நினைப்பை தூக்கியெறிவதே வலிமை
சமூகத்திற்கென்று சிலபல கடமைகள் உண்டு
சமத்துவத்தை சகலருடனும் பேணிடல் நன்று
ஜெயம்
27-04-2022

Nada Mohan
Author: Nada Mohan