இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 604

வேண்டும் வலிமை

குழந்தைகள் எல்லாம் செல்வங்கள் ஆகட்டும்
வளர்கின்ற போதே நம்பிக்கை பூக்கட்டும்
கூர்மையாகிப் புலன்கள் சிறப்பும் அடையட்டும்
ஆர்ப்பாட்டக் குழந்தையும் பன்மடங்காய்ப் படைக்கட்டும்

பிறந்த மழலையெல்லாம் சிறப்பின் வடிவம்தான்
சிறப்பான தேசத்தைக் கட்டும் ஆரோக்கியத்தூண்
ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உற்சாகத்தை விதைப்போம்
ஒவ்வாதெனும் எண்ணங்களை வேரோடு சிதைப்போம்

வலிமையை உண்டாக்குவது சவாலான விடயம்
கலைந்திட இறுக்கமும் நுழைந்திடும் விடையும்
குறைகளைக் காண்போர் குறைபாடு உள்ளோர்
அறிவினைத் திறப்பவர் சுமையாக நில்லார்

சித்தமது துணிந்திட்டால் அதுவே போதும்
புத்தியதில் விலகும் பயத்தின் பிடிவாதம்
அறிவின் அடிப்படையிலான பூலோக வாழ்வு
இறுக்கும் புலனிலும் மதியதன் நீள்வு

அவப்பெயரை பெயர்த்து எடுப்பதே வலிமை
அவமான நினைப்பை தூக்கியெறிவதே வலிமை
சமூகத்திற்கென்று சிலபல கடமைகள் உண்டு
சமத்துவத்தை சகலருடனும் பேணிடல் நன்று
ஜெயம்
27-04-2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading