சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் __65

“தொழிலாளி”

பால் பண்ணெய் தொழிலாளி
பசுவினை பராமரித்து
மேச்சல் தரைதனில் புல் மேயவிட்டு
தொழுவமதில் அழைத்து வந்தே!!

பொறுமையாக
பால் எடுக்கும் தொழிலாளி!!

நிரை நிரையாக நின்று
பால் தனை கொடுக்கும்
ஆ இனத்தை பார்த்து
ஆசந்தே போனேன்!!

மானிடனுக்கு கூட இல்லை
மாண்புமிகு பண்பு!!

பொறுமையாக
பால் எடுக்கும்
தொழிலாளி!!

பால் வகை உணவினை
பல வகையாய்
உண்டிடுவோம்
பாலகனும் மகிழ்ந்திடுவான் !!

கண்ணை இமை காப்பது போல்
எமைகாக்கும் தொழிலாளி!!
நன்றி
வணக்கம்
30.04.22

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading