மொழியே என் முகவரி..!!(2390)

மொழிதனை இயம்பிட்ட மழலைகளாய் நாம், தாய்மொழிதனை கேட்டு கருவறையில் கண்ணுறங்கும் போதே கற்றிட்ட சிசுக்களாய் நாம்! இவ்வுலகில் அவதரித்த பொழுதினிலே, “அம்மா” என்ற மூன்றெழுத்து...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு —173

தலைப்பு — தொழிலாளி

காற்றையும் மழையையும் கோடை வெயிலையும்
வேற்றுமை காட்டாது வயலில் வரவேற்று
நாற்று நட்டு நற்பயிர் வளர்த்திட
சேற்றில் சோர்வின்றி செயலாற்றுவன் தொழிலாளி.

சேற்றில் நின்று ஆற்றிடும் பணியால்
சோற்றை நாம் சுவைத்து உண்பதற்கு
ஊற்றாய் உதவிடும் உயர்தொழிலாளி விவசாயி
ஏற்றமுற எல்லோரும் உதவுவோம் இணைந்து.

கல்லுக்குள் உள்ளே கடவுளுருவைக் காட்டிட
கல்லைப் பொளிந்து காட்டுகிறான் தொழிலாளி
உள்ளத்துள் உள்ளே உறைகின்ற உலகநாதனை
உள்ளபடி கண்டிடலாம் உயர்வான வழிபாட்டால்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(03/05/2022)

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading