29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 174
10/05/2022 செவ்வாய்
“வளம் தரும் வாழை”
————————
வாழையிலே பல்வேறு இனமுண்டு
வகைகளின் எண்ணிக்கை பலவுண்டு
ஏழையின் வீட்டிலும் இதுவுண்டு
எங்கும் காணுமின்ற மரமொன்று!
கதலியும் இதரையும் பன்றியும்
கன்னல் சுவைதரும் கப்பலும்
இதந்தரு இதரையும் மொந்தனும்
இனோரன்ன பிற இன வகையும்!
விரதத்திற்கு வேண்டும் வாழையிலை
வீட்டில் விருந்திற்கும் இதே இலை
பருவ பண்டிகைக்கு பயன்படும் இலை
படைப்பதற்கும் கிடைக்குமே பச்சை இலை!
உடலுக்கு உதாரணம் வாழைத்தண்டு
உணவாகி மருந்தாகும் அரும் தண்டு
மடலிலும் உணவுண்ணும் வழமையுண்டு
மழமழப்பும் வழுவழுப்பும் கொண்ட தண்டு!
வாழையடி வாழ்கவென வாழ்த்துமுண்டு
வம்சம் பெருக்க வளமான குட்டியுண்டு
சேலையிலே பட்டால் செல்லாத கயருண்டு
சேதனம் கொண்ட செழிப்பான பயிரொன்று!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...