மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

Vajeetha Mohamed

அர்த்தமில்லாத அமைதிகள்.

அதிகார வெறியர்கள்
அவிழ்த்து விட்ட
அளவிலாப் பொய்களை
அறிவு சார்ந்தோரும்
அறிந்தறிந்தே

அமைதி காத்து
அனுமதித்ததால்
அழகு மிகு – எம்
அன்னை நாடு – இன்று
அழகிழந்து நிற்கிறது

அனைவர் முன்பும்

இடைவெளி இன்றி
இனவெறி – அன்று
இதயங்களில்
விதைக்கையில் – இன்று
இடைவிடாது

கருத்தாடுவோர்
எங்கிருந்தனர்
அமைதிகள் – அன்று
ஆர்ப்பாரித்திருந்தால்
இளைஞர்கள் – இன்று

இரவு பகலாக
வீதிதோறும்
வீறுகொண்டு
வீரிட வேண்டியதில்லை..

அதிகார
அடக்கு முறைக்கு
அறிவும் ஆற்றலும்
தெளிவும் விளக்கமும்
அமைதி கொண்டதால்
அடுத்தடுத்து வரும் – எம்
எதிர்காலப் பரம்பரையும்

தலைகொள்ளா
கடன்சுமையால்
தலைதாழ்த்தி விழிபிதுங்கி
பசியோடு பலமிழந்து நிற்கின்றது

தரமில்லாத தலைமைத்துவத்தின்
ஊறிவிட்ட ஊழல்கள்

அர்த்தமில்லா அமைதிகளால்
அடங்கிச் சென்றதால்
அனைவரும் – இன்று
நிதியோடு நீதிகேட்டு – விழி
நீர் பெருகி
பேதலித்து நிற்கின்றனர்

அமைதி
அவரவர் அல்லலை
அகற்றிடினும்
அனைத்துக்கும் அது
அர்த்தமே இல்லை

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading