பள்ளிப் பருவத்திலே-70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-05-2025 பள்ளிப் பருவத்திலே புத்தகப் பையும் சீருடையும் புன்னகை கலந்த முகப்பொலிவும் எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நிலைமாறும் பசுமை…
புரட்சி நிறைந்த புவியின் வாழ்வு
பூக்கும் மரங்கள் செயற்கையின் காவு
இயற்கை குன்றி இயல்பு மாறுதுபச்மை வரண்டிட பாதை செப்புது

பூச்சிக் கொல்லியும் புது வகை உரமும்
நிறைந்த காய்கறி பயன்பெறு யுத்தியும்
விளைந்து பெருகிட விளைச்சல் நிறைந்திட
அழியுது இயற்கை ஆளுது செயற்கை
நானில வளமே நாணிக் குறுகுது
நாம் வாழ் உலகே நச்சாய் மாறுது
நிலத்தின் உயிரினம் நிர்க்கதியாகுது
வளத்தில் பூமி வனப்பில் குன்றுது
மண்ணின் அரிப்பு மரங்களின் தறிப்பு
மாந்தவினத்தின் மதியற்ற செயலில்
பசுமை மாறுது பாரே இருளுது
நிலையது மாறும் நித்திலம் மீட்க
அறிவது கொண்டு எழுதலே வெற்றி
ஆற்றலைக் கொண்டு செயல்படல் யுத்தி.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading