29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவி தலைப்பு –
தந்தையின்
தாயககனவு
ஆசையாய் தந்தையும்
அன்னையும் தாயகம் – திரும்பிட
காசையும் சேர்த்தனர்
கஞ்சிக்கும் கூலுக்கும்
பூசையும் செய்தனர் – ஈழ
பூமியில் விடிவுவர
ஓசையின்றி நாடுசெல்ல
ஓயாது உழைத்தனர்
கடவுச்சீட்டு வரும்வரை
காத்திருந்த வேளையில்
தடம்மாறிய பயணங்கள்
தலையோடு போனதுவே
மனத்தினில் ஏக்கத்தோடு – தந்தை
மரணித்து போனாரே
கனவுகளும்
நினைவுகளும் கண்ணீராய் கரைந்தனவே
தலைமுறை மூன்று
தள்ளாடி நிற்கின்றோம்
இலைமறை காயாய்
இந்திய குடியுரிமை
கடலோரம் மண்கோட்டை கட்டிவைத்து புலம்பெயர்ந்தோம்
நடமாடுதே மனக்கோட்டை
நாட்டிற்கு தீர்வுவேண்டி
அலைபாயும் மனத்துடன்
அகதிகள் நாங்கள்
விலைபேசும் ஈழத்தின்
விதியென்று மாறுமோ😭😭😭😭😭😭😭
நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன்
ஈழத்தமிழர் வளாகம்
இந்தியா

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...